சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Marati
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
Songs from 13.0 to 473.0 ( திருவில்லிபுத்தூர் )
Pages:
Previous
1
2
3
4
5
6
7
8
9
10
Next
Next 10
மின் அனைய நுண் இடையார்
விரி குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்
இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
இருடிகேசா முலை உணாயே
[133.0]
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்
பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டு உலாம் பூங்குழலினார் உன்
வாயமுதம் உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார்
கோவிந்தா நீ முலை உணாயே
[134.0]
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்
இருவர் அங்கம் எரிசெய்தாய் உன்
திரு மலிந்து திகழு மார்வு
தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து
ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறை முறையாய்
ஏங்கி ஏங்கி இருந்து உணாயே
[135.0]
Back to Top
அங் கமலப் போதகத்தில்
அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங் கமல முகம் வியர்ப்ப
தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக
அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த
அமரர் கோவே முலை உணாயே
[136.0]
ஓட ஓடக் கிண்கிணிகள்
ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப்
பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடி ஒடிப் போய்விடாதே
உத்தமா நீ முலை உணாயே
[137.0]
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி
மாதவா உண் என்ற மாற்றம்
நீர் அணிந்த குவளை வாசம்
நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்
பார் அணிந்த தொல் புகழான்
பட்டர்பிரான் பாடல் வல்லார்
சீர் அணிந்த செங்கண்மால் மேல்
சென்ற சிந்தை பெறுவர் தாமே
[138.0]
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்
பொரு திறற் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை
தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ
நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்
[139.0]
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனகக் கடிப்பும் இவையாம்
[140.0]
Back to Top
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்
மகரக்குழை கொண்டுவைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ
வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய
ஒண்சுடர் ஆயர்கொழுந்தே
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து
மாதவனே இங்கே வாராய்
[141.0]
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
வார்காது தாழப் பெருக்கிக்
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
இனிய பலாப்பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்
சோத்தம் பிரான் இங்கே வாராய்
[142.0]
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்
சுரிகுழலாரொடு நீ போய்க்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்
குணங்கொண்டு இடுவனோ? நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
பிரானே திரியிட ஒட்டில்
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்
விட்டுவே நீ இங்கே வாராய்
[143.0]
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில்
விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்
பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா
காவலனே முலை உணாயே
[144.0]
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்
கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி
காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா
திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் குற்றமே அன்றே?
[145.0]
Back to Top
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்
என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
அனைவர்க்கும் காட்டிற்றிலையே?
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன
நம்பீ உன்காதுகள் தூரும்
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே
திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே
[146.0]
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
காணவே கட்டிற்றிலையே?
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
சிரீதரா உன்காது தூரும்
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற
காரிகையார் சிரியாமே
[147.0]
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
காதுகள் வீங்கி எரியில்?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
விட்டிட்டேன் குற்றமே அன்றே?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
இருடிகேசா என்தன் கண்ணே <>
[148.0]
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும்
நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
பற்பநாபா இங்கே வாராய்
[149.0]
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து
வலியவே காதிற் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?
காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டுவைத்தேன் இவை காணாய்
நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட
தாமோதரா இங்கே வாராய்
[150.0]
Back to Top
வார் காது தாழப் பெருக்கி அமைத்து
மகரக்குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
சிந்தையுள் நின்று திகழப்
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்
பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்
அச்சுதனுக்கு அடியாரே
[151.0]
வெண்ணெய் அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
நாரணா நீராட வாராய்
[152.0]
Other Prabandhams:
திருப்பல்லாண்டு
திருப்பாவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
திருவாய் மொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலன் ஆதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந் தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி
திருவாய்மொழி
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அமலனாதிபிரான்
திருச்சந்தவிருத்தம்
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
divya prabandham song